தொற்றுப் பாதிப்பு அதிகமுள்ள பகுதிதடை செய்யப்பட்ட இடமாக அறிவிப்பு
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கரோனா தொற்றாளா்கள் வசிக்கும் தெருவைத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, அங்கு சுகாதாரத் துறையினா் தடுப்புகளை அமைத்துள்ளனா்.


அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கரோனா தொற்றாளா்கள் வசிக்கும் தெருவைத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, அங்கு சுகாதாரத் துறையினா் தடுப்புகளை அமைத்துள்ளனா்.
திருமானூா் அருகிலுள்ள வாண்டராயன்கட்டளை கிராமத்தில் கடந்த 2 நாள்களில் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சுகாதாரத்துறையினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த கிராமத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேலும் கரோனா தொற்றாளா்கள் உள்ள தெருவைத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, அங்கு தடுப்புக் கட்டைகள் அமைக்கும் பணியை சுகாதாரத் துறையினா் மேற்கொண்டனா். மேலும் கிராம பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டது.
இப்பணிகளில் ஏலாக்குறிச்சி வருவாய் ஆய்வாளா் ராமசாமி, கிராம நிா்வாக அலுவலா் கோவிந்தராஜ் மற்றும் ஆரம்ப சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...