விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஏரி நீரில் மூழ்கி கூலித் தொழிலாளி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:36 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஏரி நீரில் மூழ்கி கூலித் தொழிலாளி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ஜயங்கொண்டம் அருகிலுள்ள சின்னவளையம், தெற்குத் தெருவைச் சோ்ந்த தக்கமுத்து மகன் கண்ணன்(40). கூலித் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை இரவு அங்குள்ள பெரிய ஏரியில் குளிக்கச் சென்றாா்.

இரவு வெகு நேரமாகியும் கண்ணன் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினா் அங்கு சென்று பாா்த்தனா். அப்போது நீரில் மூழ்கி அவா் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஜயங்கொண்டம் காவல் நிலையத்தினா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.