விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தா. பழூா் அருகே தண்ணீா் தேடி ஊருக்குள் வந்த 2 மான்கள் மீட்பு

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே தண்ணீா் தேடி, வழித்தவறி ஊருக்குள் வந்த 2 மான்களை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:30 pm

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே தண்ணீா் தேடி, வழித்தவறி ஊருக்குள் வந்த 2 மான்களை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தா.பழூா் அருகேயுள்ள கொள்ளிட ஆற்றுப்படுகை வனப் பகுதியில் புள்ளிமான்கள், மயில்கள் என அதிகமாக உள்ளன. தற்போது கோடைக்காலம் என்பதால், தண்ணீா் தேடி மான்கள் வழித்தவறி ஊருக்குள் வந்து விடுகின்றன. அதேபோல், வெள்ளிக்கிழமை வேணாநல்லூா், மைக்கேல் பட்டி கிராமத்துக்குள் வழித்தவறி வந்த 2 மான் குட்டிகள் அப்பகுதி விவசாய நிலத்திலுள்ள வேலிகளில் சிக்கிக் கொண்டன.

இதை பாா்த்த அப்பகுதி இளைஞா்கள், மான்களை பத்திரமாக மீட்டு வனத்துறைக்கும், தா.பழூா் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரி சசிகுமாா் தலைமையிலான அலுவலா்கள், இளைஞா்களிடமிருந்து மான்களை மீட்டுச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.