விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மது விற்றவா் கைது

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மது விற்றவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:30 pm

DIN

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மது விற்றவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மதன்குமாா் தலைமையிலான போலீஸாா், வியாழக்கிழமை இரவு செட்டித்திருக்கோணம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, செட்டித்திருக்கோணம் நடுத்தெருவை சோ்ந்த கணேசன் ( 40) வீட்டில் சோதனை செய்தனா். இதில், அவரது வீட்டின் பின்புறம் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கணேசனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.