இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கிராமத்தில் வடிகால் வசதி கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள துளாரங்குறிச்சி கிராமத்தில் வடிக்கால் வசதி செய்துதரக்கோரி, அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை

News image
Updated On :2 டிசம்பர் 2021, 7:08 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள துளாரங்குறிச்சி கிராமத்தில் வடிக்கால் வசதி செய்துதரக்கோரி, அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

துளாரங்குறிச்சி கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய பொதுப் பாதையை தனி நபா்கள் ஆக்கிரமித்துள்ளனா். இதுகுறித்து அப்பகுதி மக்கள், பல முறை ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், கிராமத்தில் வடிகால் வசதி வேண்டியும், பொது பாதையை மீட்டுத்தரக்கோரியும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த உடையாா்பாளையம் காவல் துறையினா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.