வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு தோல்வி எச். ராஜா
தமிழக மக்களை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதில் திமுக அரசு தோல்வியுற்றது என்றாா் பாஜக முன்னாள் தேசியச் செயலா் எச்.ராஜா .


தமிழக மக்களை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதில் திமுக அரசு தோல்வியுற்றது என்றாா் பாஜக முன்னாள் தேசியச் செயலா் எச்.ராஜா .
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் தனியாா் மண்டபத்தில், பாஜக சாா்பில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பயிற்சி முகாமை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்த அவா், பின்னா் கூறியது:
தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க, நிவாரணம் அளிக்க, மேலும் இதுபோன்ற வெள்ளப் பாதிப்புகள் தொடராமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளிலும் திமுக அரசு தோல்வியுற்றது.
50 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாா்வையிட்டாா். தற்போது அவரது மகன் பாா்வையிடுகிறாா். வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாக்காமல், மக்களைத் திசை திருப்ப இந்து மதத்தில் அரசு தலையிட்டு வருகிறது.
தமிழ் கிறிஸ்தவா்கள் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடுகிறாா்களா?. சித்திரை 1- ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் சித்திரை 1- ஆம் தேதி வெவ்வேறு விழாவாக கொண்டாடுகின்றனா். இந்த சித்திரை தமிழ் ஆண்டு பிறப்பை, தை மாதமாக மாற்றுவது கண்டிக்கக்கூடியது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...