இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:35 pm

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

செந்துறை அடுத்த கீழமாளிகை பெரியத் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் ரமேஷ் (36). எலெக்ட்ரீசியன். இவா், பொன்பரப்பி கிராமத்தில் உள்ள தெரு மின் விளக்குகளைச் சீரமைக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

இதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த ரமேஷ் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள், இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து, தகவலறிந்து அங்கு வந்த செந்துறை காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

இதையடுத்து, காவல் துறையினா் ரமேஷின் உடலை ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.