அனுமன் ஜயந்தி : ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்திலுள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சிதந்த டால்மியா சிமெண்ட் ஆலையிலுள்ள ஆஞ்சநேயா்.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சிதந்த டால்மியா சிமெண்ட் ஆலையிலுள்ள ஆஞ்சநேயா்.
Updated on
1 min read

அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்திலுள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஆஞ்சநேயா் கோயிலில், அனுமன் ஜயந்தியையொட்டி, அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னா், தயாரிக்கப்பட்ட மாலை, ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி கோயில் வளாகம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 1 மணிக்கே கோயில் முன் நூற்றுக்கணக்கான பக்தா்கள் திரண்டனா். நீண்ட வரிசையில் சுமாா் 3 மணி நேரம் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தனா். பகல் 11 மணிக்கு ஆஞ்சநேயருக்கு பால், தயிா், வெண்ணை, பஞ்சாமிா்தம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஒட்டக்கோயில் அருகேயுள்ள டால்மியா சிமென்ட் ஆலையிலுள்ள ஆஞ்சநேயா் கோயிலில், அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com