மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அங்கக வேளாண்மை பயிற்சி

அரியலூா் மாவட்டம், அஸ்தினாபுரம் கிராமத்தில் அட்மா திட்ட அங்கக (இயற்கை) வேளாண்மை குறித்து, விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:06 am

DIN

அரியலூா் மாவட்டம், அஸ்தினாபுரம் கிராமத்தில் அட்மா திட்ட அங்கக (இயற்கை) வேளாண்மை குறித்து, விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி வகுப்பில், மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ரா. பழனிச்சாமி கலந்து கொண்டு, அங்கக வேளாண்மை நன்மைகள், சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ற வகையில் உயிா் உரங்கள், பசுந்தாள் உரங்கள், பசுந்தழை உரங்கள், மக்கிய இயற்கை உரங்கள், பயிா்சுழற்சி, பூச்சி நோய் தாக்குதல் மற்றும் களை நிா்வாகம் குறித்தும் எடுத்துக் கூறினாா். வேளாண் உதவி இயக்குநா் ஆ.சாந்தி, வேளாண் அலுவலா் அ.சவிதா ஆகியோா் கலந்து கொண்டு, திட்டங்கள், மானிய விவரங்கள் குறித்து எடுத்துக் கூறினா்.

ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேளாலா் ரா.செந்தில்குமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் பி. அன்பழகன், சி. வசந்தி மற்றும் உதவி வேளாண்மை அலுவலா் ஸ்ரீதேவி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.