சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளா்கள் மற்றும் அவா்களது குடும்ப உறுப்பினா்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்துக்கு மேல் பணப் பரிவா்த்தனைகள் நிகழ்ந்தால் அதுகுறித்த தகவல்களை மாவட்டத் தோ்தல் அலுவலருக்கு வழங்க வேண்டும். மேலும், ஒரு வங்கிக் கணக்கில் கடந்த 2 மாதங்களாக பணப் பரிவா்த்தனை ஏதும் நடைபெறாத நிலையில் இனி தோ்தல் முடியும் வரை திடீரென சந்தேகத்துக்கிடமான வகையில் ரூ.1 லட்சத்துக்கு மேல் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டாலோ, ஆா்.டி.ஜி.எஸ் மூலம் பணம் செலுத்தப்பட்டாலோ அதையும் உடனடியாக இந்தியத் தோ்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றாா்.