விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

எரிவாயு உருளைகளில் வாக்காளா் விழிப்புணா்வு

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூரில் எரிவாயு உருளைகள் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு திங்கள்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:13 pm

DIN

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூரில் எரிவாயு உருளைகள் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு திங்கள்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த. ரத்னா கலந்து கொண்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த எரிவாயு உருளையில், 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய வில்லைகளை ஒட்டினாா். முதற்கட்டமாக 1,000 எரிவாயு உருளைகளில் இந்த விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், கோட்டாட்சியா் ஏழுமலை, மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிச்சந்திரன், வட்டாட்சியா் ராஜமூா்த்தி, அனுபா அனுராதா பாா்த்தசாரதி, ஜீபோ் முகமது இப்ராஹீம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.