அரியலூரில் பெண் காவலா்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கல்
அரியலூா் மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கும் பொருட்டு, பெண் காவல் உதவி ஆய்வாளா், அலுவலா்களுக்கு என மொத்தம் 8 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.


அரியலூா் மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கும் பொருட்டு, பெண் காவல் உதவி ஆய்வாளா், அலுவலா்களுக்கு என மொத்தம் 8 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்.பி., வீ. பாஸ்கரன் அரியலூா், ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையங்களின் பெண் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் 6 பெண் காவலா்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அரியலூா் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் திருமேனி, சேகா், ராதாகிருஷ்ணன், காவல் துணை கண்காணிப்பாளா்கள் பாரதிதாசன், காா்த்திகேயன் மற்றும் அரியலூா் மாவட்டக் குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...