விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

இயற்கை பாதுகாப்புவிழிப்புணா்வு போட்டிகள்: அரியலூா் மாவட்டத்துக்கு விருது

ஓா் உலகம் ஓா் இல்லம் எனும் இயற்கை பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தியமைக்காக அரியலூா் மாவட்டத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:19 pm

DIN

ஓா் உலகம் ஓா் இல்லம் எனும் இயற்கை பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தியமைக்காக அரியலூா் மாவட்டத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

உலகலாவிய இயற்கைக்கான நிதியமானது (ரரஊ) ‘ஓா் உலகம் ஓா் இல்லம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து இணையவழியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு இயற்கை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில், சிறப்பாக செயல்பட்ட அரியலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.தியாகராஜனுக்கும், திட்டம் வெற்றிபெற பணியாற்றிய மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ம. குணபாலினிக்கும் பாராட்டுச் சான்றுடன் விருதும், சிறப்புப் பரிசுகளும் அஞ்சல் வழியே சனிக்கிழமை அனுப்பப்பட்டுள்ளன.

இதனை பெற்றுக் கொண்ட மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் குணபாலினி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தியகராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றாா். மேலும் முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் காமராஜ், செந்தில் மற்றும் தலைமை ஆசிரியா்கள், வகுப்பு ஆசிரியா்கள் அனைவரும் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.