இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

அரியலூா் அருகேமின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மின்னல் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:52 pm

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மின்னல் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே விவசாயி உயிரிழந்தாா்.

செந்துறையை அடுத்த வஞ்சனபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரஜினி(எ) தியாகராஜன் (50). விவசாயியான இவா், வியாழக்கிழமை பிற்பகல், அங்குள்ள விவசாய நிலங்களில் தனது இரண்டு ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது இடி - மின்னலுடன் மழை பெய்ததையடுத்து, தியாகராஜன் மழைக்காக ஒதுக்குப்புறமாக உள்ள புளிய மரத்துக்கு கீழே நின்று கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்னல் பாய்ந்தது.

இதில் தியாகராஜனும், அவரது இரண்டு ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதுகுறித்து, தகவலறிந்து வந்த செந்தறை காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.