எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வாளரக்குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

அரியலூர் மாவட்டம், வாளரக்குறிச்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, அக்கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
அடிப்படை வசதிகள் கேட்டு சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடவு போராட்டத்தில் ஈடுபடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொது மக்கள்.
Updated On :5 அக்டோபர் 2021, 8:06 am

DIN

அரியலூர்: அரியலூர் மாவட்டம், வாளரக்குறிச்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, அக்கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாளையக்குடி ஊராட்சிக்கு உள்பட்ட வாளரக்குறிச்சி கிராம பொது மக்களுக்கு சாலை வசதி, பேருந்து வசதி மற்றும் குடிநீர், மயான கொட்டகை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்.  

அப்பகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, 100 நாள் வேலை, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்டவைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல முறை ஊராட்சி நிர்வாகத்துக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததால்,

அக்கட்சியின் சார்பில் வாளரக்குறிச்சி கிராமத்திலுள்ள சேறும் சகதியுமான சாலையில் கொட்டும் மழையிலும் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு, அக்கட்சியின் கிளைச் செயலாளர்கள் ஆ.அப்பாதுரை, கோ.முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலர் ஆர்.மணிவேல், மாவட்ட செயற்குழு உஉறுப்பினர் எம்.இளங்கோவன், வட்டச் செயலர் ஏ.கந்தசாமி,மாவட்டக் குழு உறுப்பினர் பி.பத்மாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.