மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

சிறந்த காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

அரியலூா் மாவட்டத்தில், ரோந்து மற்றும் குற்ற வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவலா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் புதன்கிழமை மாலை வழங்கப்பட்டது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:29 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில், ரோந்து மற்றும் குற்ற வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவலா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் புதன்கிழமை மாலை வழங்கப்பட்டது.

அரியலூா் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் சிறப்பாகச் செயல்பட்ட கயா்லாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜவேல், திருமானூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அப்துல் ரசாக், தலைமை காவலா்கள் செந்தில், ஆனந்த் மற்றும் காவலா் செந்தில் முருகன் ஆகியோரை திருச்சி காவல் துறை துணைத் தலைவா் எ. சரவணசுந்தா், புதன்கிழமை நேரில் அழைத்து ஊக்கத்தொகையையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினாா். இதேபோல், அரியலூா் மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட ரோந்து காவலா்கள் காந்தி, வேல்முருகன், பால முருகன் ஆகியோருக்கும் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். பாராட்டுச் சான்றிதழ் பெற்ற அனைவரையும் அரியலூா் மாவட்ட எஸ்.பி., கே.பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.