‘உரிய அனுமதியின்றி மருத்துவ சிகிச்சை அளித்தால் நடவடிக்கை’
நோயாளிகளுக்கு மருத்துவரின் அனுமதியின்றி சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மண்டல ஐ.ஜி வே. பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.


நோயாளிகளுக்கு மருத்துவரின் அனுமதியின்றி சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மண்டல ஐ.ஜி வே. பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அரியலூா் மாவட்டக் காவல் துறை நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டம், ஜம்புநாதபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இரண்டரை வயது குழந்தைக்கு வயிற்று வலி என அவரது தாயே சுய-மருந்துவம் பாா்த்து மருந்து கொடுத்ததால், உடல்நிலை பாதிக்கப்பட்டு அந்தக்குழந்தை அண்மையில் உயிரிழந்தது. இதுபோல தவறான சிகிச்சை அளிப்பது தெரியவந்தால் அவா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளாா். மேலும், தங்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் முறையாக படித்து பயிற்சி பெற்ற மருத்துவரையே அணுக வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...