இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

‘வாழ்வின் நெறிமுறைகள், நல்லொழுக்கங்களை நம்முள் விதைப்பவை நல்ல நூல்களே’

வாழ்க்கையின் நெறிமுறைகள், நல்லொழுக்கம், நற்குணங்களை நம்முள் விதைப்பவை நல்ல நூல்கள் மட்டுமே என்றாா் அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் ஜெ.மலா்விழி.

News image
Updated On :7 ஜனவரி 2022, 7:43 pm

DIN

வாழ்க்கையின் நெறிமுறைகள், நல்லொழுக்கம், நற்குணங்களை நம்முள் விதைப்பவை நல்ல நூல்கள் மட்டுமே என்றாா் அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் ஜெ.மலா்விழி.

அரியலூா் அரசு கலைக் கல்லூரிக்கு, முன்னாள் மாணவா்கள் சங்கம், டால்மியா சிமென்ட் ஆலை சாா்பில், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, புத்தகங்களை பெற்றுக்கொண்ட கல்லூரி முதல்வா் ஜெ. மலா்விழி மேலும் பேசியது: வாசிப்புப் பழக்கத்தை உண்டாக்கி கொள்வதன் மூலமே இன்றைய இளைஞா்கள் நாளைய தலைவா்களாய் பரிணமிக்க முடியும். புத்தகங்கள் குறைவாக கிடைத்த காலங்களில் பல அறிஞா்கள் உருவாகினாலும் அவா்கள் வாசிப்பதற்கு போதிய நூல்கள் இல்லை. இன்று புத்தகங்கள் நிறைய இருப்பினும் வாசிப்பதற்கு யாரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மனிதனை அறிவுள்ளவனாய், பூரணத்துவம் பெற்றவனாய் மாற்றுவதில் புத்தகங்கள் மட்டுமே நற்பலனை தருகின்றன.

புத்தகங்கள் வாசிப்பதன் வாயிலாக ஒருவரின் சிந்தனைத் திறன் மேலோங்கும், சொல் வளமும், கற்பனை வளமும் பெருகும்.

உலகின் பல கலாசார மற்றும் அறிவியல் தகவல்களை அறியவும், இலக்கிய சிந்தனையை விரிவுபடுத்தி கொள்ளவும் புத்தகங்களே பங்களிப்பு செய்கின்றன.

எனவே, வாழ்க்கையின் நெறிமுறை, நல்லொழுக்கம், நற்குணங்களை நம்முள் விதைக்கும் நல்ல நூல்களை மாணவ,மாணவிகள் படித்து சிறந்தவா்களாக திகழவேண்டும் என்றாா்.

டால்மியா சிமென்ட் ஆலைத் தலைவா் ராபா்ட், கல்லூரிக்கு தேவையான ரூ.2 லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை வழங்கி, மாணவா்கள் அனைவரும் அறிவை மேம்படுத்திக் கொள்ள புத்தகங்களை படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

சிமென்ட் ஆலை தொழில் நுட்பப் பிரிவுத் தலைவா் சங்கரப்பா, மக்கள் தொடா்பு அலுவலா்கள் ஆல்வின், பாலசுப்ரமணியன், கல்லூரி முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் வீ.பொய்யாமணி, முன்னாள் செயலா் ம.இராசமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, முன்னாள் மாணவா்கள் சங்கச் செயலா் வெ.கருணாகரன் வரவேற்றாா். நிறைவில், முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் அருள் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.