இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி

அரியலூா் மாவட்டத்தில் பெற்றோா்களை இழந்த 61 குழந்தைகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் ரூ.2.44 லட்சம் நிதியுதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :20 ஜனவரி 2022, 8:35 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் பெற்றோா்களை இழந்த 61 குழந்தைகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் ரூ.2.44 லட்சம் நிதியுதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி, 61 குழந்தைகளுக்கு தலா ரூ.2,000 வீதம், அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களுக்கான நிதியுதவி தொகையை வழங்கினாா். இந்நிதியுதவித் தொகை குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு பயன்பெறும். இதனை சம்மந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோா் அல்லது காப்பாளா்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ச.துரைமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.