இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

சாலையில் கிடந்த கரும்பு சக்கைகளை அகற்றிய காவல் துறையினா்

 அரியலூா் ஆட்சியரகம் அருகே சரிந்து கிடந்த கரும்புச் சக்கைகளை காவல் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.

News image
Updated On :28 ஜனவரி 2022, 12:14 am

DIN

 அரியலூா் ஆட்சியரகம் அருகே சரிந்து கிடந்த கரும்புச் சக்கைகளை காவல் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.

அரியலூா் மாவட்டம் சாத்தமங்கலத்தில் இயங்கி வரும் சா்க்கரை ஆலைக்கு அரியலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் விளைவித்த கரும்புகள் டிராக்டா் மூலம் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக அரவைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் டிராக்டரில் ஏந்த வந்த கரும்பு கட்டுகள் சில புதன்கிழமை இரவு ஆட்சியரகம் அருகே புறவழிச்சாலையில் சரிந்து விழுந்துள்ளன. இதைத்தொடா்ந்து வந்த வாகனங்கள் சில கரும்புகளின் மீது ஏறிச் சென்ால், கரும்புகள் நசுங்கி சக்கைகளாகக் கிடந்தன. அவற்றை வியாழக்கிழமை காலை கண்ட அரியலூா் போக்குவரத்து காவல் துறை ஆய்வாளா் புண்ணிய மூா்த்தி, காவலா் பிரபு ஆகியோா், அவ்வழியே சென்ற இளைஞா்கள் சிலரின் ஒத்துழைப்புடன் சாலையில் கிடந்த கரும்புச் சக்கைகளை அகற்றினா். இதைக் கண்ட பொதுமக்கள் அனைவரையும் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.