மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 15 ஆண்டுகள் சிறை

அரியலுாா் அருகே 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, அரியலுாா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:26 pm

DIN

அரியலுாா் அருகே 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, அரியலுாா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

அரியலூரை அடுத்த முன்னுாரான்காடுவெட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சைபிள்ளை (45). கடந்த 22.10.2020 ஆண்டு இவா், 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். புகாரின் பேரில் ஜயங்கொண்டம் மகளிா் காவல் துறையினா் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து பிச்சைப்பிள்ளையை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், பிச்சைப்பிள்ளைக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீா்ப்பளித்தாா். இதையடுத்து பிச்சைப்பிள்ளை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.