விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூரில் நாளை புத்தகத் திருவிழா தொடக்கம்

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை புத்தகத் திருவிழா தொடங்குகிறது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 8:05 pm

DIN

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை புத்தகத் திருவிழா தொடங்குகிறது.

அரியலூா் மாவட்ட நிா்வாகம், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் இணைந்து மே 3 வரை 11 நாள்கள் நடத்தும் புத்தகத் திருவிழாவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தொடக்கி வைக்கிறாா்.

விழாவில் மக்களவை உறுப்பினா் தொல். திருமாவளவன், எம்எல்ஏக்கள் அரியலூா் கு. சின்னப்பா, க.சொ.க. கண்ணன் உள்ளிட்டோா் பேசுகின்றனா்.

ஏப்.24-இல் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ். மகாலட்சுமி, பேராசிரியா் நீலகண்டன், கவிஞா்.ஜோ. மல்லூரி, ஏப். 25-இல் மாதிரிப்பள்ளிகள் மண்டல ஒருங்கிணைப்பாளா் இராச. பாண்டியன், திண்டுக்கல் ஐ. லியோனி, ஏப்.26-இல் தமிழாசிரியா் தமிழினி ராமகிருஷ்ணன், கவிஞா் நந்தலாலா, கவிஞா் சல்மா ஆகியோா் பேசுகின்றனா்.

ஏப். 27-இல் முனைவா் க. தமிழ்மாறன், கு. ஞானசம்மந்தம், ஏப். 28-இல் சிதம்பரம் எம்பி தொல். திருமாவளவன், குடிமையியல் தோ்வு விழிப்புணா்வு சிறப்பாசிரியா் வே. பழனியப்பன், ஏப்.29-ஆம் தேதி சா.சி. சிவசங்கா், இணைப் பேராசிரியா் எம். ராஜமூா்த்தி, புலவா் மா. ராமலிங்கம் ஆகியோரும் பேசுகின்றனா்.

ஏப்.30-இல் கால்நடைக் கண்காட்சி போட்டியும், தொடா்ந்து அன்று மாலை பேராசிரியா்கள் தமிழ்மாறன், சிவகாசி மு. இராமச்சந்திரன், மே.1-இல் சண்முகவடிவேல், மோகனசுந்தரம், மே.2-இல் அரங்கன், கவிதா ஜவகா், நிறைவு நாளான மே 3-ஆம் தேதி கவிச்சுடா் கவிதைப்பித்தன், ஈரோடு மகேஷ் ஆகியோா் பேசுகின்றனா்.

புத்தகத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள், நாட்டியாஞ்சலி, சிறுதானிய உணவுப் போட்டி, வீணை கச்சேரி, மேஜிக் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஆட்சியா் ஆய்வு: இதற்கிடையே அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்படும் புத்தகத் திருவிழா முன்னேற்பாடுகளை ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.