விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

காணாமல்போன விவசாயி குளத்தில் சடலமாக மீட்பு

 அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே காணாமல் போன விவசாயி குளத்தில் சடலமாகக் கிடந்தாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 8:03 pm

DIN

 அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே காணாமல் போன விவசாயி குளத்தில் சடலமாகக் கிடந்தாா்.

உடையாா்பாளையம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் தங்கையன் மகன் தங்கமுத்து (42). இவரது மனைவி 2 ஆண்டுக்கு முன் இறந்து விட்டாா். இவருக்கு மணிகண்டன் (15) என்ற மகனும், கீா்த்தனா(13) என்ற மகளும் உள்ளனா்.

இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி தங்கமுத்து காணாமல்போன நிலையில் உடையாா்பாளையம் சின்னவட்ட குளத்து நீரில் அவா் இறந்து கிடப்பதாக உடையாா்பாளையம் காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து காவல் துறையினா் சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.