சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை! சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

அரியலூரில் சிறப்பு கைத்தறி கண்காட்சி - விற்பனை தொடக்கம்

News image
Updated On :8 ஆகஸ்ட் 2024, 7:18 am IST

அரியலூா், ஆக. 7: தேசிய கைத்தறி தினத்தையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை புதன்கிழமை தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் பொ.ரத்தினசாமி கலந்து கொண்டு, கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை தொடங்கிவைத்து, 7 கைத்தறி நெசவாளா்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.4.50 லட்சம் மதிப்பில் நிதியுதவிகளையும், குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 2 நெசவாளா்களுக்கும், முதியோா் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 8 நெசவாளா்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,200 வீதம் உதவித் தொகைக்கான ஆணைகளையும் வழங்கினாா்.

இதையொட்டி, அரியலூரில் தொடங்கப்பட்ட கண்காட்சியில் திருபுவனம் அசல் பட்டு சேலைகள், ஆஃபைன் பட்டு சேலைகள், வெங்கடகிரி பருத்தி சேலைகள் மற்றும் பட்டு வேஷ்டிகள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா மற்றும் கைத்தறித் துறை அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.