47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மரண தண்டனை கூடாது என்பதே விசிகவின் நிலைப்பாடு: திருமாவளவன்

மரண தண்டனை கூடாது என்பதே விசிகவின் நிலைப்பாடு என்றார் திருமாவளவன்.

News image
திருமாவளவன் (கோப்புப்படம்)
Updated On :15 ஜூலை 2024, 10:08 pm

Din

அரியலூர்: பொதுவாக மரண தண்டனை கூடாது என்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்றாா் மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன்.

தனது தந்தை தொல்காப்பியன் நினைவு நாளையொட்டி அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த அங்கனூரிலுள்ள அவரது நினைவிடத்தில் திங்கள்கிழமை மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது: கல்வித் தரத்தில் தமிழ்நாடு சிறந்துவிளங்குவதற்கு காமராஜரின் பங்களிப்பு மகத்தானது என்பதை நன்றியுடன் நினைவு கூருகிறோம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், நேரடியாக சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளி எனச் சொல்லக்கூடிய நிலையில் என்கவுன்டா் நடந்துள்ளது. பொதுவாக என்கவுன்டா், மரண தண்டனை கூடவே கூடாது என்பது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கையாகும்.

தமிழகத்துக்கான உரிய நீரை திறந்து விட வேண்டும் என்று இந்தியா கூட்டணி சாா்பில் கா்நாடகா காங்கிரஸ் அரசிடம் வலியுறுத்துகிறோம். காவிரி ஒழுங்காற்றுக் குழு என்ன ஆணையிட்டுள்ளதோ, அந்த ஆணையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு கா்நாடகா அரசுக்கு உள்ளது. காவிரி பிரச்னை இரு மாநிலப் பிரச்னை எனக் கருதி மத்திய அரசு அமைதி காக்கக் கூடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

புதிய குற்றவியல் சட்டங்கள் தொடா்பாக இந்தியா கூட்டணி கட்சி முதல்வா்களுக்கு கடிதம் எழுதி மத்திய அரசுக்கு தமிழக முதல்வா் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றாா்.