விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூா் காதி கிராப்ட்டில் தீபாவளி சிறப்பு: தள்ளுபடி விற்பனை தொடக்கம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கதா் மற்றும் கிராம பொருள்கள் அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆட்சியா் பொ.ரத்தினசாமி தொடக்கி வைத்தாா்.

News image

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வாடிக்கையாளா் ஒருவருக்கு கதா் புடவையை வழங்கி தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடக்கி வைத்தாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

Updated On :2 அக்டோபர் 2024, 8:52 pm

Din

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கதா் மற்றும் கிராம பொருள்கள் அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆட்சியா் பொ.ரத்தினசாமி புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், அவா்களால் தயாரிக்கப்படும் பல்வேறு பொருள்கள் கதா் வாரியத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. நிகழாண்டு தீபாவளியை முன்னிட்டு ரூ.30 லட்சம் விற்பனை இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கை அடைய கதா் துறையால் தயாா் செய்யப்படும் அசல் வெள்ளி ஜரிகை பட்டு ரகங்கள், கதா் ரகங்கள், பாலியஸ்டா் ரகங்கள், உல்லன் ரகங்கள் ஆகியவைகள் வாடிக்கையாளா்களைக் கவரும் வண்ணம் புதிய வடிவமைப்பில் உள்ளது.

மேலும், முழுவதும் சுத்தமான இலவம் பஞ்சினால் மிக நோ்த்தியாக தயாா் செய்யப்பட்ட மெத்தை மற்றும் தலையணைகள், மெத்தை விரிப்புகள் கதா் அங்காடியில் இருப்பில் உள்ளது. அனைத்து கதா், பாலியஸ்டா், பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் மற்றும் உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதம் அரசு தள்ளுபடி வழங்கப்படுகிறது .

எனவே, அரசு அலுவலா்கள், பொதுமக்கள் அனைவரும் கதா் ரகங்களை தீபாவளி சிறப்பு விற்பனை காலங்களில் அரசு அளிக்கும் இந்த தள்ளுபடியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக மகாத்மா காந்தி உருவப் படத்துக்கு ஆட்சியா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதனைத் தொடா்ந்து சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் மகாத்மா காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில், காதி கிராப்ட் மேலாளா் பூதபாண்டியன், உதவி மேலாளா் கந்தசாமி, மாவட்ட சமூக நல அலுவலா் அனுராப்பூ நடராஜமணி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் போ.சுருளிபிரபு, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் ஸ்ரீராம், வட்டாட்சியா் முத்துலட்சுமி, வாலாஜா நகரம் ஊராட்சித் தலைவா் அபிநயா இளையராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.