விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூா் அரசு மருத்துவமனைக்கு நவீன தானியங்கி சலவை இயந்திரம்

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.10.65 லட்சம் மதிப்புள்ள நவீன தானியங்கி சலவை இயந்திரம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.10.65 லட்சம் மதிப்புள்ள நவீன தானியங்கி சலவை இயந்திரத்தை வழங்கி, இயக்கி வைத்த சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா.

Updated On :17 அக்டோபர் 2024, 8:30 pm

Din

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.10.65 லட்சம் மதிப்புள்ள நவீன தானியங்கி சலவை இயந்திரம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10.65 லட்சம் மதிப்பிலான நவீன தானியங்கி சலவை இயந்திரத்தை வழங்கி, அதனை இயக்கி வைத்து, இதனை முறையாக பயன்படுத்திக் கொண்டு தூய்மையை பேணிக்காக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளா் ரமேஷ், நகா்மன்றத் தலைவா் சாந்திகலைவாணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.