விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஜெயங்கொண்டத்திலிருந்து திருச்சி, திருப்பூருக்கு புதிய பேருந்துகள் தொடக்கி வைப்பு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலிருந்து திருச்சி மற்றும் திருப்பூருக்கு 3 புதிய அரசுப் பேருந்துகள் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.

News image

ஜெயங்கொண்டத்திலிருந்து திருச்சி, திருப்பூருக்கு புதிய பேருந்துகளை புதன்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.

Updated On :23 அக்டோபர் 2024, 8:36 pm

Din

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலிருந்து திருச்சி மற்றும் திருப்பூருக்கு 3 புதிய அரசுப் பேருந்துகள் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், திருச்சிக்கு இடைநில்லா 2 பேருந்துகளையும் மற்றும் திருச்சி, கரூா் வழியாக திருப்பூருக்கு ஒரு பேருந்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன், திருச்சி மண்டல போக்குவரத்து கழக துணை மேலாளா் சாமிநாதன்( வணிகம்), கோட்ட மேலாளா் ராமநாதன், ஜெயங்கொண்டம் கிளை மேலாளா் ராம்குமாா், வட்டாட்சியா் சம்பத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.