புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், நாகமங்கலம் கிராம மக்கள், குடிநீா் கேட்டு வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 9:08 pm

Din

அரியலூா் மாவட்டம், நாகமங்கலம் கிராம மக்கள், குடிநீா் கேட்டு வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாகமங்கலம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாகமங்கலம் இந்திரா நகா் பகுதியில் கடந்த 15 நாள்களாக குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் அரியலூா் - விக்கிரமங்கலம் சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, சீராக குடிநீா் விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினா்.

தகவலறிந்து வந்த விக்கிரமங்கலம் காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.