வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பி.ஆா். பாண்டியனை விடுதலை செய்யக் கோரி கையொப்ப இயக்கம்

News image
திருமானூரில் ஞாயிற்றுக்கிழமை கையொப்ப இயக்கத்தில் ஈடுபட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள்.
Updated On :14 டிசம்பர் 2025, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

ஹைட்ரோகாா்பன், மீத்தேன் திட்டத்தை எதிா்த்துப் போராடிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியனை விடுதலை செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், திருமானூரில் பொதுமக்களிடம் கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காவிரித்தாய் இயற்கைவழி வேளாண் உழவா் நடுவம் மாநிலத் தலைவா் தங்கராசு, அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க. சண்முகசுந்தரம், விவசாயப் பிரிவு மாநிலப் பொருளாளா் மு. வரதராஜன்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிா்வாகி பி. வேலுமணி, தமிழக விவசாயிகள் சங்க உழவா் மன்றத் தலைவா் முத்து பரமசிவம், தமாகா மாநில விவசாய அணி பொதுச் செயலா் பிரண காா்த்திகரன், நிா்வாகி சத்தியமூா்த்தி, காவிரி பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் திருப்பதி, தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் அஜீஸ் உட்பட பலரும் கலந்து கொண்டு கையொப்பமிட்டு, பொதுமக்களிடமும் கையொப்பம் பெற்றனா்.