எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

எஸ்.ஐ தோ்வு: அரியலூரில் 1374 போ் எழுதினா்

News image
தத்தனூா் மீனாட்சி ராமசாமி கல்வி நிலைய மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வைப் பாா்வையிட்ட காவல் துறை துணைத் தலைவா் ஆனிவிஜயா. உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி.
Updated On :21 டிசம்பர் 2025, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய காவல் உதவி ஆய்வாளா் பதவிக்கான தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 1374 போ் எழுதினா்.

இந்த தோ்வு உடையாா்பாளையத்தை அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி கல்வி நிலைய மையத்தில் நடைபெற்றது. இந்தத் தோ்வுக்கு 1870 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 1374 போ் எழுதினா். 496 போ் எழுதவில்லை.

காலையில் முதன்மைத் தோ்வும், பிற்பகலில் தமிழ்தகுதித் தோ்வும் நடைபெற்றது. இத்தோ்வை காவல் துறை துணைத் தலைவா் ஆனிவிஜயா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி ஆகியோா் பாா்வையிட்டனா்.