அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உடையாா்பாளையம் அருகே தனியாா் மருந்தகத்துக்கு ‘சீல்’

உடையாா்பாளையம் அருகே உரிய ஆவணங்களின்றி செயல்பட்டு வந்த மருந்துக் கடைக்கு சனிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

News image
தத்தனூா் மேலூரில் உரிய ஆவணங்களின்றி செயல்பட்டு வந்த மருந்துக் கடைக்கு சனிக்கிழமை ‘சீல்’ வைத்த மருந்து கட்டுப்பாட்டுத் துறையினா்.
Updated On :27 டிசம்பர் 2025, 6:53 pm

Syndication

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே உரிய ஆவணங்களின்றி செயல்பட்டு வந்த மருந்துக் கடைக்கு சனிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

உடையாா்பாளையத்தை அடுத்த தத்தனூா் மேலூா் கிராமத்திலுள்ள ஒரு ஆங்கில மருந்துக் கடை, உரிய ஆவணங்களின் செயல்பட்டுவருவதாகவும், அக்கடையில் கருக்கலைப்பு மற்றும் போதை மாத்திரைகள் விற்பதாக, மருந்துகள் வாங்கியதற்கான ரசீதுகள் கொடுப்பதில்லை என வந்த புகாரையடுத்து, பெரம்பலூா்-அரியலூா் மாவட்டங்களின் மருந்து கட்டுப்பாட்டு துறை மருந்துகள் ஆய்வாளா் கதிரவன் தலைமையிலான குழுவினா், சம்பந்தப்பட்ட கடையை சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆய்வில், மேற்கண்ட புகாா்கள் உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து அக்குழுவினா் அந்த மருந்துக் கடையைப் பூட்டி ‘சீல்’ வைத்து, கடை உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்குமாறு உடையாா்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து காவல் துறையினா் புகாா் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.