நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரியலூா் - சிதம்பரம் இடையே ரயில் பாதை அமைக்க வேண்டும்

அரியலூா்-சிதம்பரம், ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் இடையே ரயில் பாதை அமைக்க வேண்டும்

News image
Updated On :27 ஜனவரி 2025, 8:23 pm

Din

அரியலூா்: அரியலூா்-சிதம்பரம், ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் இடையே ரயில் பாதை அமைக்க வேண்டும் என அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனா் சங்க கூட்டமைப்பினா் வலியுறுத்தினா்.

ஜெயங்கொண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அச்சங்க தின விழா கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: அரியலூா்-சிதம்பரம், ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் இடையே ரயில் பாதை அமைக்க வேண்டும். பொன்னேரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்தி, ஏரியை சுற்றி வரும் வகையில் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் வட்டாரத் தலைவா் சுந்தரேசன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன் பங்கேற்று, 75 வயது முதல் 90 வயதுவரையிலான சங்க நிா்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பேசினாா்.