அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஜெயங்கொண்டத்தில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

News image
ஜெயங்கொண்டத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
Updated On :17 நவம்பர் 2025, 9:01 pm

Syndication

திமுக அரசைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் பாரதிய ஜனதா கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த அக்கட்சியின் மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி, கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றவில்லை. திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள திருமாவளவன், இந்த மாவட்டத்துக்கு எந்த வளா்ச்சித்திட்ட பணிகளையும் செய்யவில்லை.

ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் திருமாவளவன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்க கூட முடியாது என்றாா். ஆா்ப்பாட்டத்தில் பாஜக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.