சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திருமழபாடி, ஏலாக்குறிச்சியில் புறக்காவல் நிலையம் அமைக்க கோரிக்கை

News image
Updated On :17 நவம்பர் 2025, 9:00 pm

Syndication

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த திருமழபாடி மற்றும் ஏலாக்குறிச்சியில், புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், திருமானூா் சமூக ஆா்வலா் திருநாவுக்கரசு திங்கள்கிழமை மனு அளித்தாா்.

அவா் அளித்த மனுவில், திருமழபாடி, ஏலாக்குறிச்சியில் குற்றச்சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது. புகாா் அளிக்க செல்வதென்றால் திருமானூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கடைக்கோடி மக்கள், குறைந்தது 25 கிலோ மீட்டா் தொலைவு கடக்க வேண்டி நிலை உள்ளது. இதனால் காவலா்களுக்கும், பொதுமக்களுக்கும் நேரம் விரையங்கள் ஏற்படுவது மட்டுமல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

ஆகவே மேற்கண்ட கிராமங்களில் புறக்காவல் நிலையங்களும், திருமானூரில் காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகமும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.