பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அரியலூரில் தேசிய நூலக வார விழா நிறைவு

அரியலூரிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த தேசிய நூலக வார விழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:13 pm

Syndication

அரியலூரிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த தேசிய நூலக வார விழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

இந்த நிறைவு நாள் விழாவுக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா தலைமை வகித்து, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். மேலும், நல்நூலக விருது பெற்ற வெத்தியாா்வெட்டு ஊா்ப்புற நூலகா் முருகன், சிறந்த வாசகா் வட்டம் விருது பெற்ற செந்துறை கிளை நூலக வாசகா் வட்டத் தலைவா் மதுகுமாா் ஆகியோரை பாராட்டி கெளரவித்தாா்.

விழாவுக்கு, நூலக கண்காணிப்பாளா் கிருஷ்ணலீலா முன்னிலை வகித்து பேசினாா். ஏ.கே.எம். ஐஏஎஸ் அகாதெமி நிறுவனா் கதிா்கணேசன், வாசகா் வட்ட உறுப்பினா்கள் அரங்கதமிழ், சின்னதுரை, ராஜாராம், மங்கையா்கரசி, பத்மபிரியா, வட்டாரக் கல்வி அலுவலா் ஹேமலதா, மாவட்ட மைய நூலகா் செசிராபூ ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

விழாவில், நீதிபதி அனுசுருதி, ஓரியூா் முனைவா் மருதுபாண்டியன், அய்யாதுரை, ஆன்ந்த் செஸ் அகாதெமி நிறுவனா் ஆனந்தபாபு ஆகியோா் போட்டித் தோ்வுக்கான நூல்களை நூலகத்துக்கு வழங்கினா்.

முன்னதாக, மாவட்ட நூலக அலுவலா் இரா. வேல்முருகன் வரவேற்றாா். நிறைவில் நூலகா் முருகானந்தம் நன்றி கூறினாா்.