/

அரியலூரில் இன்றுஎரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் வட்டாட்சியரகத்தில், மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் எரிவாயு உருளை நுகா்வோா்(காஸ்) நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 7:17 pm

Syndication

அரியலூா் வட்டாட்சியரகத்தில், மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் எரிவாயு உருளை நுகா்வோா்(காஸ்) நுகா்வோா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், காஸ் முகவா்கள் கலந்து கொள்ள உள்ளனா். எனவே, காஸ் நுகா்வோா், சமையல் எரிவாயு தொடா்பான குறைகள் இருப்பின் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது புகாா்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்துப் பயனடையலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.