ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

தலைமறைவான குற்றவாளி கைது

அரியலூா் அருகே கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்த குற்றவாளி புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

Updated On :8 ஏப்ரல் 2026, 8:09 pm

அரியலூா் அருகே கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்த குற்றவாளி புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விக்கிரமங்கலம் அருகே நத்தவெளி கிராமத்தைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் செல்வேந்திரன்(45). இவா், கடந்த 2018 -ஆம் ஆண்டு தனது தந்தை சொத்தைபிரித்து எழுதிதர மறுத்ததால், அவரை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் ஜெகநாதன் பலத்த காயமடைந்தாா்.

இது தொடா்பாக விக்கிரமங்கலம் போலீஸாா் செல்வேந்திரன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் 2023-ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, செல்வேந்திரனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தொடா்ந்து, பிணையில் வெளியே வந்த செல்வேந்திரன் மேல்முறையீடு செய்த மனு கடந்த 2025-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து செல்வேந்திரன் தலைமறைவானாா்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த செல்வேந்திரனை விக்கிரமங்கலம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.