
செந்துறையில் விசிகவினா் சாலை மறியல்
மதுரை, மேலவளவு கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த செல்வம் தாக்கப்பட்டதைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், செந்துறையில் அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செந்துறையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
மதுரை, மேலவளவு கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த செல்வம் தாக்கப்பட்டதைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், செந்துறையில் அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குன்னம் தொகுதிப் பொறுப்பாளா் அன்பானந்தம் தலைமையில் செந்துறை அம்பேத்கா் சிலை முன் திரண்ட விசிகவினா், அவ்விடத்திலேயே சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது அவா்கள், மதுரை மேலவளவு செல்வத்தை தாக்கியோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.
தகவலறிந்து சென்ற செந்துறை காவல் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் அனைவரும் கலைந்து சென்றனா். மறியலால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






