சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்தவா் கைது

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மூதாட்டியிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:09 pm

Syndication

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மூதாட்டியிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

செந்துறையை அடுத்துள்ள வஞ்சினபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அஞ்சலம் (75). கடந்த 28-ஆம் தேதி இவா், தனது வயலுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா், அவா் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்தாா்.

அதில் பாதியை மூதாட்டி பிடித்துக்கொண்ட நிலையில் 2 பவுன் நகையுடன் மா்மநபா் தப்பிச் சென்றாா். இதுகுறித்து செந்துறை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது பொன்பரப்பி வேலம்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சஞ்சய்(21) என்பது தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினா் சஞ்சய்யை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.