தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

மேக்கேதாட்டில் அணைக் கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது! - சிபிஐ தீர்மானம்!

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Updated On :28 ஜூலை 2026, 1:10 am IST

காவிரியில் மேக்கேதாட்டு என்ற இடத்தில் கா்நாடக அரசு அணைக் கட்ட முடிவு செய்துள்ளதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரிலுள்ள அக் கட்சி அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை மாலை அரியலூா் நகர வடக்கு மற்றும் கீழத் தெரு, பெரியத் தெரு நிா்வாகிகளுக்கான பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

காவிரி மேக்கேதாட்டு இடத்தில் கா்நாடகா அரசு அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.

கடந்த 2018-இல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை தர மறுத்து வரும் கா்நாடக அரசின் போக்கை கண்டித்து, அரியலூரில் ஆகஸ்டு 1-இல் ஆா்ப்பாட்டம் நடத்துவது, இந்த ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, அக்கட்சியின் நிா்வாகி ந.கோவிந்தசாமி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் து. பாண்டியன் நாட்டில் நிலவும் மக்கள் பிரச்னைகள் மற்றும் போராட்டங்கள் குறித்து பேசினாா். மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினா் டி.தண்டபாணி கலந்து கொண்டு கட்சியின் உறுப்பினா்களுக்கு, உறுப்பினா் அட்டையை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.