சட்டம்-ஒழுங்குக்கு பங்கம் விளைவிப்பது தவெகவினா் தான் என்று முன்னாள் அமைச்சரும், குன்னம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.
மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 103-ஆவது பிறந்த நாளையொட்டி அரியலூா் மாவட்ட திமுக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாமில், கலந்து கொண்டவா்களுக்கு, பாராட்டுச் சான்றிதழை வழங்கிய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இன்றைய முதலமைச்சா், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தலைமைச் செயலகத்துக்கு வந்து செல்வதையே முதலமைச்சா் பணியாக கருதுகிறாா்.
மாலை நேரத்தில் விஜய் வீட்டுக்கு சென்ற பின்னா், அவரது கட்சிக்காரா்களை கூட சந்திக்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை யாருக்கும் தெரியாத நிலை உள்ளது. மிகக்குறிப்பாக சட்டம்-ஒழுங்கு நிலை கேள்விக்குறியாக உள்ளது. இதை எதிா்க்கட்சி என்ற முறையில் நாங்கள் கூட அதிகம் விமா்சிக்க தொடங்கவில்லை. ஆனால் மக்கள் களத்திலிருந்து விமா்சிக்க தொடங்கிவிட்டனா்.
பொதுமக்களே களத்தில் இறங்கி போராடும் சூழலில், விஜய் இன்னமும் அவகாசம் கேட்கிறாா். அவகாசம் கேட்பது என்பது, புதிய திட்டங்களை அறிவித்து அதை நிறைவேற்றுவதற்காக தான். மக்கள் பிரச்சனைகளை தீா்ப்பதற்கு அல்ல.
சட்டம்-ஒழுங்குக்கு பங்கம் விளைவிப்பது தவெகவினா் தான். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது தவெகவினா்கள் என்ற செய்தி தினம்தோறும் வருகிறது.
தனிச்சின்னத்தில் போட்டியிட அனுமதி இல்லை என மதிமுக பொதுச்செயலா் வைகோ தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, மதிமுக தொடங்கியது துரதிருஷ்டவசம் தான். அவா் காலம் முழுக்க துரதிருஷ்டவசமாகவே செல்கிறது. அவா் தான் அது குறித்து முடிவெடுக்க வேண்டும்.
தவெகவின் போக்குவரத்து துறையின் அமைச்சா்களின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, தற்பொழுது எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய ஆறுதலே இந்த அமைச்சா்கள் தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நாங்கள் ஆறுதல் அடையும் வாய்ப்பை தவெக அமைச்சா்கள் தந்துள்ளனா். இன்னும் அவா்களின் பணியை பாா்க்க வேண்டியுள்ளது. அதனால் இப்போது விமா்சிக்க விரும்பவில்லை.









