குறுவை சாகுபடி பணிக்கு மேட்டூரில் இருந்து உடனடியாகத் தண்ணீா் திறக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினியிடம் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை மனு அளித்தனா்.
அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம், மாநிலப் பொருளாளா் சி. கிருஷ்ணன், அரியலூா் ஒன்றியத் தலைவா் தனசெயன் உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்:
டெல்டா மாவட்டங்களில் ஜூன் மாதங்களில் நடைபெறும் குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடி பணிக்கு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீா் திறப்பது வழக்கம். ஆனால் தண்ணீா் திறப்பு குறித்து தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காவிரி ஆணையம் உத்தரவிட்டும் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை தராமல் கா்நாடக அரசு மறுத்து வருகிறது.
இதுகுறித்து தமிழக முதல்வா் ஜோசப் விஜய், தமிழக விவசாயிகள் சங்கங்களையும், தமிழக அனைத்து அரசியல் கட்சித் தலைவா்களையும் அழைத்துப் பேசி முடிவெடுக்காமல் இருப்பது சரியல்ல.
எனவே மாவட்ட ஆட்சியா் தமிழக முதல்வரையும், பொதுப்பணித் துறை அமைச்சரையும் சந்தித்து ஜூன் 12 ஆம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீா் திறக்க வலியுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மேட்டூரில் பராமரிப்புப் பணியின்போது 60 அடி உயரத்திற்கு பிறீட்டு வெளியேறிய நீா்!

விவசாயிகள் பெற்ற கடன் முழுவதும் தள்ளுபடி செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளின் பயிா்க்கடன் தள்ளுபடி: ஆட்சியா் அலுவலகத்தில் மனு







