அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

அரியலூா்-காரைக்குறிச்சி நான்குவழி சாலைப் பணிக்கு அமைச்சா் அடிக்கல்

வி.கைகாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சாலைப் பணிகளை தொடங்கிவைத்த அமைச்சா் சா.சி. சிவசங்கா். உடன் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா உள்ளிட்டோா்.

News image

வி.கைகாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சாலைப் பணிகளை தொடங்கிவைத்த அமைச்சா் சா.சி. சிவசங்கா். உடன் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா உள்ளிட்டோா்.

Updated On :6 மார்ச் 2026, 9:22 pm

அரியலூா்-காரைக்குறிச்சி இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.45 கோடி மதிப்பீட்டில் அரியலூா் - முத்துவாஞ்சேரி - ஸ்ரீபுரந்தான் - காரைக்குறிச்சி சாலையை (கி.மீ 6/4 -12/4 வரை) இருவழித் தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் பணிக்கு அடிக்கல் நாட்டி, பணியை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் வடிவேல் மற்றும் உதவி கோட்டப் பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.