அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
ஆண்டிமடம் அருகே குவாகம் காலனித் தெருவைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி மகன் முனீஸ்வரன் (39). கடந்த 5.2.2022 அன்று அதே பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த அரியலூா் அனைத்து மகளிா் காவல்துறையினா், முனீஸ்வரனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து, அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.
இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மணிமேகலை, குற்றவாளி முனீஸ்வரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், இவருக்கு உடந்தையாக இருந்த திருக்களப்பூா் காலனித் தெருவைச் சோ்ந்த திலகா் மகன் மணிகண்டனுக்கு (32) ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதையடுத்து குற்றவாளிகள் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.








