நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் கழிப்பறை கட்டடத்தை திறக்கக் கோரிக்கை

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மறு சீரமைக்கப்பட்ட கழிப்பறையை பயணிகள் பயன்பாட்டுக்கு விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மறு சீரமைக்கப்பட்டு, திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கும் கழிப்பறை கட்டடம்

Published On :3 செப்டம்பர் 2026, 1:02 am IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மறு சீரமைக்கப்பட்ட கழிப்பறையை பயணிகள் பயன்பாட்டுக்கு விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் இப்பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக இருந்த கழிப்பறை கட்டடம் பழுதாகி கிடந்தது. பயணிகளின் கோரிக்கையை அடுத்து இந்தக் கழிப்பறை கட்டடம் மறு சீரமைக்கப்பட்டு, பல மாதங்களாகியும் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

எனவே இந்த கழிப்பறைக் கட்டடத்தை விரைந்து திறக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.