தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

திடீர் தீ: மரங்கள், கேபிள் வயர்கள் சேதம்

குளித்தலை - மணப்பாறை சாலையோரம் முளைத்திருந்த நாணல் புற்களில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் அப்பகுதியில் இருந்த மரங்கள், கேபிள் வயர்கள் சேதமடைந்தன.

Updated On :13 மே 2013, 1:40 am IST

குளித்தலை - மணப்பாறை சாலையோரம் முளைத்திருந்த நாணல் புற்களில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் அப்பகுதியில் இருந்த மரங்கள், கேபிள் வயர்கள் சேதமடைந்தன.

கரூர் மாவட்டம், குளித்தலை - மணப்பாறை மாநில நெடுஞ்சாலையில், குளித்தலையிலிருந்து கோட்டமேடு செல்லும் வழியில் சாலையோர வயல் பகுதியில் நாணல் புற்கள் அதிகளவில் முளைத்திருந்தன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை திடிரென காய்ந்த நிலையில் இருந்தபுற்களில் தீப்பிடித்தது. விரைவாக பரவிய தீயால் சில பனை, வாழைகள், கேபிள் வயர்கள் கருகின. இதையடுத்து உடனடியாக இப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

இதனிடையே இப்பகுதி பொதுமக்கள் அருகிலிருந்த தண்ணீர் மோட்டாரைப் பயன்படுத்தி தீயணைக்க முற்பட்டனர். இருப்பினும் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை.  தகவலறிந்து வந்த முசிறி தீயணைப்புத் துறை வீரர்கள் ஒரு மணிநேர போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.