டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சங்க காலப் புலவர்கள் நினைவுத்தூணுக்கு மாலை

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு கரூரில் சங்க கால புலவர்கள் நினைவுத்தூணுக்கு தமிழறிஞர்கள் மாலை அணிவித்து உறுதிமொழியேற்றனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:44 am

DIN

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு கரூரில் சங்க கால புலவர்கள் நினைவுத்தூணுக்கு தமிழறிஞர்கள் மாலை அணிவித்து உறுதிமொழியேற்றனர்.
 உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு கரூரில் கருவூர் திருக்குறள் பேரவை நிறுவனர் மேலை. பழநியப்பன் தலைமையில் கரூர் வட்டாட்சியரகம் முன் உள்ள சங்க காலப் புலவர்கள் நினைவுத்தூணுக்கு தமிழறிஞர்கள் புதன்கிழமை மாலை அணிவித்தனர். பின்னர் அனைவரும், தமிழிலே பேசுவோம், குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயரைச் சூட்டுவோம், உறவினரை தமிழில் அழைப்போம், ஒவ்வொருவரும் திருக்குறளை படித்து அதை வாழ்வியல் நெறியாக்கி வாழ்வோம் என உறுதியேற்றனர்.
நிகழ்ச்சியில் தமிழறிஞரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான காமராஜ், சதாசிவம், இயற்கை பாதுகாப்பு மைய தமிழ்ச்சேரன், நூலகர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.