கரூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் யோகாசன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றுகள் வழங்கப்பட்டன.
கரூர் மாவட்ட யோகாசனச் சங்கம் மற்றும் விவேகானந்தா யோகா தெரபி மையம் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான யோகாசனப் போட்டிகள் மணவாடியில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டம் முழுவதிலும் 68 பள்ளிகளில் இருந்து 1,682 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் கேஜி வகுப்பு பிரிவினர், முதல் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரை, 4ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மற்றும் 26 முதல் 35 வயது வரை, 36-50 வயது வரை, 51வயதுக்கு மேற்பட்டோர் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவியர் பிரிவு போட்டியில் மாணவர்கள் பிரிவில் லிட்டில் பிளவர் பள்ளி மாணவர் அஜய்குமார் சாம்பியன் பட்டத்தையும், மாணவிகள் பிரிவில் பரணிபார்க் பள்ளி மாணவி நந்திதாஸ்ரீ சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் பரிசுகள் வழங்கினார். ஏற்பாடுகளை மாவட்ட யோகாசன சங்கச் செயலாளர் எம்.மாதவன் தலைமையில் சங்கத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 7 போ் பயன்

தமிழ்த் தேசியப் போராளி செல்லப்பா மறைவுக்கு அஞ்சலி

அரசு பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

