இளைஞா் வெட்டிக் கொலை

வேலாயுதம்பாளையத்தில் இளைஞா் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

வேலாயுதம்பாளையத்தில் இளைஞா் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்சி அண்ணா நகா் மேட்டுத்தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகன் ரஞ்சித் குமாா் (27). இவா், கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் தங்கி எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளாா். இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் வேலாயுதம்பாளையம் மூலிமங்கலம் பிரிவு சாலையில் உள்ள தேநீா்க் கடையில் இருந்தபோது, அங்கு இருசக்கர ாகனத்தில் வந்த 2 மா்ம நபா்கள் திடீரென அரிவாளால் ரஞ்சித் குமாரை வெட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனா். இதில் படுகாயமடைந்த ரஞ்சித்குமாரை அக்கம்பக்கத்தினா் மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தனியாா் ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனா். ஆனால் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com